வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்!!

4083

சுகாதார ஊழியர்கள்…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் 15 கோரிக்கைகளை முன்வைத்து தீர்வுகள் தாமதம் பிரச்சனைகள் முடிவற்றவை ஒருங்கிணைந்த போராட்டத்துக்கு ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் இன்று (03.06.2021) வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் வைத்தியசாலைக்கு முன்னால் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதாரத் துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து சுகாதார தொழிற்சங்க ஓன்றிணைப்பு நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனையடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் 12 மணிவரை தமது கடமைகளில் இருந்து வெளியேறி 15 கோரிக்கையினை முன்வைத்து வைத்தியசாலை வாயில் முன்னால் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து பணிபஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.