வவுனியா வைத்தியசாலையில் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி!!

1350

கொரோனா தடுப்பூசி..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா மற்றும் கிளிநொச்சி வளாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் இன்று (04.06.2021) காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரையில் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 ஆயிரத்து 100 பேருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவை வழங்கியதன் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன் அடுத்தகட்டமாக யாழ். பல்கலைக்கழக வவுனியா மற்றும் கிளிநொச்சி வளாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்து இன்று தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

அந்த வகையில் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தினை சேர்ந்த 62 பேருக்கும் கிளிநொச்சி வளாகத்தைச் சேர்ந்த 60 பேருக்கும் என 122 பேருக்கு இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டது.