வவுனியா சகாயமாதாபுரத்தில் எழுமாற்று பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று : முடக்கப்படும் நிலையில் கிராமம்?

2349

கொரோனா..

வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட எழுமாற்று பிசீஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் வீதிகளில் அத்தியாவசிய தேவையின்றி நடாமாடுவோர் மற்றும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட இடங்களில் சுகாதாரப் பிரிவினரால் இன்று (04.06) எழுமாற்று பிசீஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில், ஏற்கனவே தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்ட வவுனியா சகாயமாதாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான 20 அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கிராமத்தில் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் கிராமத்தை முடக்குவது குறித்தும் சுகாதாரப் பிரிவினர் கவனம் செலுத்தியள்ளமை குறிப்பிடத்தக்கது.