கேகாலையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!!

1445


மண்சரிவு..



கேகாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மாவனெல்லை, தெவனகலயில் வீடொன்றின் மீது பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.



இந்த அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நாடாளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.




இதேவேளை பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை 7 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் இரத்தினபுரியில் மண்சரிவில் சிக்கிய 17 வயதான மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.