கொரோனா பாதித்த மாமனாரை தோளில் சுமந்து மருத்துவமனை சென்ற மருமகள்!!

1033

அசாமில்..

இந்திய மாநிலம் அசாமில் கொரோனாவால் உ.யிருக்கு போ.ராடிய மாமனாரை தோளில் சுமந்து மருத்துவமனை சேர்ப்பித்துள்ளார் மருமகள். அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வருபவர் 75 வயதான துலேஷ்வர் தாஸ். இவரது மகன் சூரஜ் தமது வேலை நிமித்தம் வெளியூர் சென்றுள்ளார்.

குடியிருப்பில் அவரது மனைவி நிகாரிகாவும் தந்தை துலேஷ்வர் தாசும் மட்டுமே இருந்துள்ளனர். இந்த நிலையில் துலேஷ்வர் தாசுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மாமனாரை எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்று நிகாரிகா குழம்பிப்போயுள்ளார்.

தாமதித்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அவர் சிறிதும் தாமதிக்காமல் கொரோனா பாதித்த தன் மாமனாரை தோளில் சுமந்து, கிடைத்த வாகனம் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இதனிடையே, மாமனாரை தோளில் சுமந்து வந்ததால் நிகாரிகாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கும் தொற்று உறுதியானது. அவரை வீட்டுத் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று தன்னலம் பாராமல் மாமனாரை தோளில் சுமந்து சென்று பொறுப்புடன் செயல்பட்ட நிகாரிகாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.