மண்சரிவில் உயிரிழந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் தொடர்பில் வெளியான தகவல்!!

1165


மண்சரிவில்..



மாவனெல்ல, தெவனகல பிரதேசத்தில் நேற்று வீடு ஒன்றின் மீது மண் சரிவு ஏற்பட்டமையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 57 வயதான விஜேரத்ன, 55 வயதான அவரின் மனைவியும் 29 வயதான மகனும் 23 வயதான மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



நேற்று முன்தினம் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் இந்த கும்பத்தினர் உயிரிழந்தள்ளனர். இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்த இடத்தில் இதற்கு முன்னரும் சிறிய மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.




பின்னர் மரணமடைந்த மகன் வெளிநாடு சென்று அனுப்பி பணத்தில் மண் சரிவு இடம்பெற்ற இடத்திற்கு முன்னால் இரண்டு மாடி வீடு ஒன்றை நிர்மாணித்துள்ளனர்.


உயிரிழந்த மகன் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் மீண்டும் வெளிநாடு செல்ல தயாராகியுள்ளார். நாட்டில் நிலவும் கோவிட் நிலைமை காரணமாக வெளிநாடு செல்வது தாமதமாகியள்ளது. எனினும் இறுதியில் முழு குடும்பம் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.