பயண கட்டுப்பாடு அமுலிலுள்ள போதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!!

634

கொரோனா..

பயண கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்ளாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு குறையைவில்லை என சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார். பலர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் அடுத்தவாரமளவில் நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடையலாம் என தெரிவித்துள்ள அவர் ஆனால் அது நாங்கள் எதிர்பார்த்தளவிற்கு காணப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.