வவுனியா வைத்தியசாலையின் குறை நிறைகளை தெரிவிக்க அபிப்பிராயப் பெட்டிகள்!!

304

வவுனியா வைத்தியசாலையில் உள்ள குறை நிறைகளை நோயாளர்கள் அறிவிப்பதற்காக அபிப்பிராய பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் கு.அகிலேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா வைத்தியசாலையின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கோடு நோயாளர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவேண்டிய தேவையுள்ளது.

எமது வைத்தியசாலையில் நோயாளர்களின் அபிப்பிராயங்களை கேட்பதனூடாக எமது வைத்தியசேவையை இன்னுமோர் தரத்திற்கு முன்னோக்கி நகர்த்த முடியும் என கருதப்பட்டதன் காரணமாக நாம் வைத்தியசாலையில் 12 அபிப்பிராயப் பெட்டிகளை பொருத்தியுள்ளோம்.

இவ்வாறான பெட்டிகள் சிகிச்சை நிலையங்கள் மற்றும் விடுதிகள் வைத்தியசாலையின் வாயில் பகுதி என்பனவற்றில் பொருத்தப்பட்டுள்ளது.

Hospital

எனவே பொதுமக்கள் மற்றும் நோயாளர்கள் தாம் வைத்தியசாலையில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தமக்கு திருப்திகரமான சேவை என்பனவற்றின் கருத்துக்களை இப் பெட்டியினுள் இடமுடியும்.

அத்துடன் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் சேவையை வழங்க மறுப்பவர்கள் தொடர்பிலும் ஆலோசனைகளை வழங்க முடியும்.

அத்துடன் வைத்தியசாலையின் மேம்பாட்டுக்கான ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் இப் பெட்டிகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை நேரடியாக எனக்கு முன்னால் திறக்கப்பட்டு என்னால் பரிசீலிக்கப்படும் என்பதனால் உடனடி தீர்வுகளையும் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் வைத்தியசாலையின் அத்தியட்சகர் தெரிவித்தார்.