வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று : தொற்றாளர் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது!!

4280

கொரோனா..

யாழ்ப்பாணத்தில் 112 பேர் உட்பட வட மாகாணத்தில் நேற்று 247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று (07.06.2021) காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 112 பேரும், வவுனியா மாவட்டத்தில் 85 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 26 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 21 பேரும், மன்னார் மாவட்டத்தில் 03 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை இதுவரை வவுனியா மாவட்டத்தில் 1040 கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். கோவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இது தகவல் வெளியிடப்பட்டுள்ளது