இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக 17 பேர் உயிரிழப்பு!!

569

சீரற்ற வானிலை..

இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக இன்று காலை நிலவரப்படி 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் கேகாலையை சேர்ந்த ஐந்து பேரும், புத்தளம், இரத்தினபுரி மற்றும் கம்பஹாவை சேர்ந்த தலா 3 பேரும் அடங்குவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பேரைக் காணவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக 206,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 17 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை 978 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சீரற்ற வானிலை, நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் சேதங்களை விளைவித்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.