வவுனியா வறுமைக்கோட்டிற்குட்பட்ட 25 குழந்தைகளுக்கு பால்மா உள்ளடங்கிய பொதிகள் வழங்கி வைப்பு!!

3550

பால்மா..

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள EVAHSAA KIDS WORLD நிறுவனத்தினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 25 குழந்தைகளுக்கு பால்மா உள்ளடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பயணத்தடையினால் அன்றாட வாழ்வாதாரத்திற்கு மக்கள் இன்னல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பல அமைப்புக்கள், சமூக ஆர்வளர்கள் அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொதிகள் என்பவற்றினை வழங்கி வருகின்றனர்.

எனினும் சில வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு பால்மா கொள்வனவு செய்வதற்கு பணமின்றி பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை தொடர்பில் வவுனியா மாவட்ட ஊடகவியவாளர் பாஸ்கரன் கதீஷனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமையினையடுத்து,

வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள EVAHSAA KIDS WORLD நிறுவனத்தினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 25 குழந்தைகளுக்கு பால்மா உள்ளடங்கிய பொதிகள் வழங்கப்பட்டது.