வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் மீண்டும் குளவிகள்!!

329


puthukulam

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் மீண்டும் குளவிகள் கூடு கட்டியதால் பாடசாலையில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மதியம் பாடசாலை மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.



கடந்தவருடம் நடை பெற்ற மாகாணசபை தேர்தலின் போது புதுக்குளம் மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடியில் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் குளவி தாக்கியதில் மரணமடைந்திருந்தார் பின்னர் அவ்விடத்தில் இருந்த குளவிகள் அழிக்கப்பட்டன.

அதே இடத்தில் நேற்று கூடு கட்டியுள்ளது இதனை அவதானித்த பாடசாலை நிர்வாகம் விரைந்து செயற்பட்டு மாணவர்களை பாடசாலையிலிருந்து வெளியேற்றி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.



பாடசாலை நேரத்தில் குளவிகள் கலைந்திருந்தால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும். மாலை பாடசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் குளவிகள் அழிக்கப்பட்டன.