21ஆம் திகதி வரை பயணத் தடை தொடர்ந்தும் நீடிப்பு : 14ஆம் திகதி நீக்கப்பட மாட்டாது!!

2238

பயணத் தடை..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

-தமிழ்வின்-