இன்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலை அதிரடியாக அதிகரிப்பு!!

1326

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு..

சிபேட்கோ எரிப்பொருள் நிரப்பு நிலையங்களின் எரிப்பொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை : 20 ரூபாவால் அதிகரிப்பு – (157 ரூபா), ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலின் விலை : 23 ரூபாவால் அதிகரிப்பு – (184 ரூபா),

ஒரு லீற்றர் டீசல் : 07 ரூபாவால் அதிகரிப்பு – (111 ரூபா)
ஒரு லீற்றர் சுப்பர் டீசல் : 12 ரூபாவால் அதிகரிப்பு – (144 ரூபா)
ஒரு லீற்றர் மண்ணெண்ணை : 07 ரூபாவால் அதிகரிப்பு – (77 ரூபா)

எரிபொருள் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய எரிபொருள் விலை தொடர்பிலான நடைமுறை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.