வவுனியா கற்குழியில் 97 பேரிடம் எழுமாறாக பிசீஆர் பரிசோதனை!!

2244

பிசீஆர் பரிசோதனை..

வவுனியா, கற்குழிப் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக 97 பேரிடம் பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கற்குழிப் பகுதியில் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து எழுமாறாக பிசீஆர் பரிசோதனையை முன்னெடுத்திருந்தனர்.

அத்தியாவசிய தேவை கருதி அனுமதி பெற்று வீதியால் பயணித்தவர்கள், தேவையற்ற வகையில் கற்குழி கிராமத்தில் நடமாடியவர்கள், வீடுகளில் இருந்தோர் என பலரும் பொலிசாரால் வரவழைக்கப்பட்டு,

சுகாதாரப் பிரிவினரால் அவர்களது விபரங்கள் பதியப்பட்டு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. கற்குழியின் மூன்று பகுதிகளில் இவ்வாறு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 97 பேர் வரையில் பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, பிசீஆர் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.