தனது 15 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 36 வயது தந்தை நேற்று (20) கல்கமுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்துக் கொண்டுள்ளார்.
கல்கமுவ நீதிமன்றத்திற்குள் குறித்த நபர் கழுத்தறுத்துக் கொண்ட நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கென குருநாகல் போதனா வைத்தியசலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கல்கமுவ – யக்தெசாவ பகுதியைச் சேர்ந்த நபரே கழுத்தறுத்துக் கொண்டுள்ளார்.