ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டல்கலை பகுதியை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி இரு இளைஞர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்டுபத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் குறித்த மாணவி வியாழக்கிழமை பிற்பகல் டிக்கோயா நகருக்கு சென்று முச்சக்கர வண்டியில் வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் மற்றைய இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.