கணவர் உ யிரிழந்த ஒரே வாரத்தில் மனைவியும் ப லி : தொடரும் கொரோனா ம.ரணங்கள்!!

905

கொரோனா..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கணவர் உ.யிரிழந்த ஒரு வாரத்தின் பின்னர் மனைவியும் உ.யிரிழந்த சம்பவம் ஒன்று வெயங்கொட பகுதியில் பதிவாகியுள்ளது. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட் தொற்றினால் பா.திக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒரு வாரத்திற்கு முன்னர் உ.யிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் மனைவியும் உ.யிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த தம்பதியினரின் மூன்று பிள்ளைகளும், ஒரு பேரப்பிள்ளையும் கோவிட் தொற்றினால் பா.திக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

கணவர் கோவிட் தொற்றினால் உ.யிரிழந்த நிலையில், தாய், மூன்று மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்ததாக அத்தனகல சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் குறித்த அனைவரையும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தாய் உ.யிரிழந்துள்ளதாக பொலிஸ் வி.சாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து த.னிமைப்படுத்த சட்டத்திற்கு அமைய உ.யிரிழந்த பெண்ணின் இ.றுதி கி.ரியைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.