வடமாலை அணியும் வழக்கம் ஏன்?

770

narasingar

ஆஞ்சநேயருக்கும் பைரவருக்கும் வடைமாலை அணிவிக்கும் வழக்கம் பக்தர்களிடம் உள்ளது. ராம பட்டாபிஷேகத்தின் போது, சீதாதேவி ஆஞ்சநேயருக்கு முத்துமாலை ஒன்றைப் பரிசளித்தாள். இதை வடக்கே “வடமால்யா’ என்று சொல்வார்கள். இது தென்னகத்தில் வடைமாலையாகி விட்டது.

போதாக்குறைக்கு ஆஞ்சநேயர் வானரமுகம் கொண்டவர் என்பதால், வானரத்துக்குப் பிடித்த வடைமாலை அணியும் வழக்கம் வந்துவிட்டது. எப்படியிருப்பினும், பக்தியுடன் இதை அணிவிப்பதால் பலன் உண்டு. பைரவருக்கு வாகனம் நாய். அதற்கும் வடை பிடிக்கும் என்பதால், வடைமாலை அணிவிக்கும் வழக்கம் வந்து விட்டது.