வவுனியாவில் கத்திக் குத்தில் ஒருவர் படுகாயம்!!

382


kathi-kuthuவவுனியாவில் மதுபானசாலையில் முகாமையாளராக பணிபுரியும் ஒருவர் மீது இளைஞர் ஒருவர் மேற்கொண்ட கத்திக் குத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது வவுனியா ஹொறவபொத்தானை வீதியில் அமைந்துள்ள புபீஸ் மதுபானசாலையில் முகாமையாளராக பணிபுரியும் குறித்த நபர் வாசலில் நின்ற வேளை இளைஞர் ஒருவர் அவரை தாக்கி சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.



கத்தியால் குத்திய குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வவுனியா சேர்ந்த பாலேந்திரன் (52) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.