ஒரு மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் : மா மரத்துக்கு காவலாக 4 ஆட்கள், 6 நாய்கள் : அப்படி என்ன சிறப்பு அந்த மாம்பழத்தில்?

2042

இந்தியாவில்..

இந்தியாவில் மாம்பழங்கள் விளையும் தங்கள் தோட்டத்தில் பாதுகாப்புக்கு 4 ஆட்கள் மற்றும் 6 நாய்களை தம்பதி வேலைக்கு வைத்துள்ள நிலையில் அதன் ஆச்சரிய பின்னணி வெளியாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் சங்கல்ப் – ராணி தம்பதிக்கு பழத்தோட்டம் உள்ளது. இங்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த போது அது எல்லா மரமும் போல சாதாரணமாக வளரும் என நினைத்தனர்.

அங்கு அவர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த மரக்கன்றுகள் அசாதாரண ரூபி நிற மாம்பழங்களாக வளர்ந்தன. பின்னர் தான் அது அரியவகை ஜப்பான் Miyazaki வகை மாம்பழங்கள் என தம்பதிக்கு தெரியவந்தது.

அந்த மாம்பழத்தில் அப்படி என்ன சிறப்பு என கேட்கிறீர்களா? இது உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழ வகைகளில் ஒன்றாகும். இதன் ஒரு கிலோகிராமின் விலை ரூ 2 லட்சம் 70 ஆயிரம் ஆகும்.

சங்கல்ப் – ராணி தம்பதி பேசுகையில், கடந்தாண்டு எங்கள் தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் மாம்பழங்களை தி.ருடி சென்றுவிட்டனர். இதன்பின்னர் தான் 4 காவலாளிகள் மற்றும் 6 நாய்களை காவலுக்கு போட்டுள்ளோம்.

இந்தியாவில் இந்த வகை மாம்பழங்கள் விளைவது அரிதிலும் அரிது மிக அரிது. சென்னைக்கு நாங்கள் முன்னர் மரக்கன்றுகள் வாங்க சென்ற போது நபர் ஒருவரை இரயிலில் பார்த்தோம்.

அவர் தான் இந்த மரக்கன்றுகளை முதலில் எங்களுக்கு கொடுத்தார். அதை குழந்தை போல பாதுகாத்து வளர்க்குமாறு கூறினார், அது தான் பின்னாளில் Miyazaki வகை மாம்பழ மரமாக வளர்ந்தது.

ஒரு பழத்தை ரூ 21000 கொடுத்து விலைக்கு வாங்க பல பணக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை விற்கவில்லை, ஏனெனில் அதிக செடிகளை வளர்க்க பழங்களை பயன்படுத்துவோம் என கூறியுள்ளனர்.

மத்தியப் பிரதேச தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஆர்.எஸ் கடாரா கூறுகையில், பழத்தோட்டத்தை ஆய்வு செய்துள்ளேன், இந்த பழம் இந்தியாவில் அரிதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளேன். இது விலை உயர்ந்தது, ஏனெனில் அதன் உற்பத்தி மிகக் குறைவு, அதன் சுவை மிகவும் இனிமையானது என கூறியுள்ளார்.