பயணத்தடையினை மீறியவர்களுக்கு இராணுவத்தினர் வழங்கிய தண்டனை!!

1848

பயணத்தடையினை மீறியவர்களுக்கு…

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பகுதியில் பயணத்தடையினை மீறியவர்களுக்கு இராணுவத்தினர் வழங்கிய தண்டனை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இன்று காலை மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் பகுதிகளில் பயணத்தடையினை மீறி செயற்பட்டோர் படையினரால் தண்டிக்கப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதிலும் அதனைமீறும் வகையில் செயற்பட்டோருக்கு இவ்வாறான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏறாவூர் பகுதியிலும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.