திருமணத்துக்கு முன்னரே வீட்டை விட்டு ஓடிவந்த மதனின் மனைவி : விசாரணையில் வெளியான தகவல்கள்!!

752

பப்ஜி மதன்…

ஆ.பா.ச பேச்சுக்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பப்ஜி மதனை போலீசார் கைது செய்துள்ளனர். இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா என்பவரையும் போலீசார் கைது செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

முடிந்தால் என்னை பிடியுங்கள் என சவால்விட்ட மதன், கைது செய்யப்பட்ட போது போலீசாரின் காலில் விழுந்து கெஞ்சியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் யார் இந்த மதன்? இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தது எப்படி? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது. மதனின் சொந்த ஊர் சேலம் டவுன்.

டிப்ளோமா சிவில் இன்ஜினீயரிங் முடித்த மதன், வேலை தேடி சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்திருக்கிறார். இங்கு அம்பத்தூர் பகுதியில் ஹொட்டல் ஒன்றை தொடங்கிய மதனுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் அந்த தொழிலை கைவிட்டுவிட்டு, ஆன்லைன் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்தார். பப்ஜி விளையாட்டு பிரியரான மதனுக்கு, அதன் நுணுக்கங்கள் தெரிந்துள்ளது, இதனை வீடியோவாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன்மூலம் தான் கிருத்திகா என்பவர் அறிமுகமாகி இருக்கிறார், நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. திருமணத்துக்கு முன்னரே கிருத்திகா கர்ப்பமானார்.

இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது.

பப்ஜி தடை செய்யப்பட்டாலும் விபிஎன் மூலம் டௌன்லோடு செய்து பப்ஜி கேம்மை மதன் விளையாடி வந்திருக்கிறார். அப்போதுதான் அவரைப் பின்தொடரும் பிரியர்களிடம், ஆ.பா.ச.மா.க பேசியுள்ளார்.

முதலில் கிருத்திகா இதற்கு எ.திர்ப்பு தெரிவித்தாலும் பணம் அதிகம் சம்பாதிக்க முடிந்ததால் அவரும் மதனுக்கு துணை போயுள்ளார். மதன் தன்னுடைய தோழிகளுக்கு மட்டும் 5 லட்சம் வரை சம்பளம் வழங்கியதாக தெரிகிறது.

மேலும் கிருத்திகாவின் வங்கி கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் வரை பணம் இருந்துள்ளது, இதன் மூலம் இருவரும் சொகுசுவாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

தற்போது இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஆடி கார், டேப்லட் போன்றவைகளை ப.றிமுதல் செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.