இலங்கையில் மீண்டும் பொது முடக்கம் வரலாம் : டெல்டாவின் திரிபு தொடர்பில் எச்சரிக்கை!!

569

டெல்டாவின் திரிபு..

உலக நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டுள்ள டெல்டா வைரஸ் தொற்றானது தற்போது திரிபுபட்ட வைரஸாக மாற்றமடைந்து பரவுகின்ற காரணத்தினால்,

அது குறித்து இலங்கையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் நாட்டின் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளமையானது ஆரோக்கியமானதல்ல எனவும் எச்சரித்துள்ளனர்.

இப்போது பரவும் டெல்டா வைரஸ் நாட்டிற்குள் வேகமாக பரவ ஆரம்பித்தால் மீண்டும் பொது முடக்கத்துக்கு செல்ல வேண்டி வரும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

-தமிழ்வின்-