வவுனியாவில் கொரோனாவால் மரணமடைந்தவரின் உடல் பூந்தோட்டம் மின் மயானத்தில் தகனம்!!

1706

கொரோனா…

கொரோனா தாக்கத்தால் வவுனியா, வைத்தியசாலையில் மரணமடைந்த நபரின் சடலம் பூந்தோட்டம் மின்சார மயானத்தில் இன்று (28.06) தகனம் செய்யப்பட்டது.

வவுனியா, தவசிகுளம் பகுதியில் வசிக்கும் 85 வயதுடைய நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (27.06) மாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

மரணமடைந்த நபரின் சடலம் சுகாதாரப் பிரிவினரால் எடுத்து செல்லப்பட்டு வவுனியா நகரசபையின் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின்சார மயானத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டது.