வவுனியாவில் இரு தினங்களில் 504 பேரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!

1212

பிசீஆர் பரிசோதனை..

வவுனியாவில் இரு தினங்களில் 504 பேரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலும் கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் ஒரு கட்டமாக இரண்டு நாட்களில் (28,29.06) 504 பேரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வவுனியா, கல்மடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த 287 பேருக்கும்,

தவசிகுளம் பகுதியில் 217 பேரிடமும் பிசீஆர் எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.