17 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்த 20 பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

1279


இந்தியாவில்…



இந்தியாவில் 17 வயது சிறுவனை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்த பெண், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பிரம்மசமுத்திரா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் (எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெயர் வெளியிடவில்லை),



அதிநவீன வசதி கொண்ட செல்போன் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். அதில், வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி வந்துள்ளார்.




அப்போது தான் பேஸ்புக்கில், அந்த சிறுவனுக்கு, பெங்களூவைச் சேர்ந்த ரூபா(20) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், அதன் பின் ரூபா தன்னுடைய காதலை தெரிவிக்க, இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர்.


சிறுவன் தனக்கு 17 வயது தான் ஆகிறது என்று கூறியும், ரூபா உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவரை விரட்டி, விரட்டி காதலித்து, சம்மதிக்க வைத்துள்ளார்.

இதையடுத்து இருவரும் பெங்களூருவிலும், பிரம்மசமுத்திரா கிராமத்திலும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர, இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது,


அதன் பின் இவர்களின் திருமணம் கடந்த 16-ஆம் திகதி பிரம்மசமுத்திரா கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரூபாவும், அந்த சிறுவனும் பிரம்மசமுத்திரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் 17 வயது சிறுவனை, இளம்பெண் திருமணம் செய்திருப்பதாக கூறி சக்கராயப்பட்டணா குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் செல்ல, அதன்பேரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரி சகீர் தாஜ் தலைமையிலான அதிகாரிகள், சக்கராயப்பட்டணா பொலிசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று வி.சாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அனைத்தும் உண்மை என்று தெரியவந்ததால், பொலிசார் ரூபாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.