இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

893


கொரோனா…



நாட்டில் நேற்றைய தினம் (29.06) மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.



இதன்போது 31பெண்களும் மற்றும் 16 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




இதற்கமைய, இதுவரை கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,077 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இந்நாட்டு மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளது.