வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 205 பேரில் 12 பேருக்கு கொரோனா தொற்று!!

2750

பி.சி.ஆர் பரிசோதனை…

வவுனியா நகரப்பகுதியில் நேற்றையதினம் (01.07.2021) காலை இராணுவம் மற்றும் பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரின் பசார் வீதி, மில் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள்வட்ட வீதி ஆகிய நான்கு இடங்களில் சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

சந்தை உள்வட்ட வீதியில் அமைக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை மையத்தில் 205 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களை சிகிச்சை மையத்திற்கு அனுப்பும் நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

ஏனைய பரிசோதனை மையங்களின் முடிவுகள் இன்றிரவு அல்லது நாளையதினம் வெளியாகலாம் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.