வவுனியா சதொச ஊழியர் ஒருவருக்கு கொரோனா : மூடப்பட்ட சதொச விற்பனை நிலையம்!!

2368


மூடப்பட்ட சதொச விற்பனை நிலையம்..



கொரோனா பரவலையடுத்து வவுனியா நகர சதொச கிளை இன்று (02.07) மாலை மூடப்பட்டது. வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் முடிவுகள் சில இன்று (02.07.2021) மாலை வெளியாகிய நிலையில்,



வவுனியா நகர சதொச கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த ஊழியரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,




அவருடன் தொடர்பைப் பேணிய குறித்த சதொச கிளை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சதொச கிளையும் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது.