வவுனியா, கிளிநொச்சிக்கு பெரண்டினாவின் கொவிட்-19 நிவாரண திட்டத்தின் கீழ் 17 இலட்சம் பெறுமதியில் உதவி!!

961

பெரண்டினா..

பெரண்டினாவின் கொவிட்-19 நிவாரண திட்டத்தின் கீழ் 17 இலட்சம் ரூபா பெறுமதியான உதவித்திட்டம் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் சிறுவர், முதியோர், விசேட தேவையுடையோர் பராமரிப்பு நிலையங்கள் 10 ற்கும், கொரோனா சிகிச்சை மையம் ஒன்றிக்கும் மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர், முதியோர், விசேட தேவையுடையோர் பராமரிப்பு நிலையங்கள் 6 ற்கும், கொரோனா சிகிச்சை மையம் ஒன்றிக்கும் இவ் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் , மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொழுது போக்கு உபகரணங்கள் ஆகிய உதவித்திட்டங்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டதுடன் இதனை பெரண்டினாவின் பிரதேச முகாமையாளர் ராகேஷ்,

மாவட்ட பிரதிநிதி சந்திரகுமார் இணைந்து வவுனியா மாவட்ட பொருட்களை உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் ஆகியோரிடமும் கிளிநொச்சி பொருட்களை அரசாங்க அதிபர் திருமதி.கேதீஸ்வரன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெயராசா ஆகியோரிடம் கையளித்தனர்.