மீன் வடிவத்தில் அதிசய குழந்தை!!

531

fish_child

மதுரை மாவட்டத்தில் மீன் வடிவில் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டியை சேர்ந்த சதீஸ்குமார் (30), துர்காதேவி (25) ஆகிய தம்பதிகளுக்கு ஏற்கனவே 3 குழந்தை உள்ளது.

இந்நிலையில் 4வதாக துர்கா தேவி கர்ப்பம் அடைந்தார். பிரசவ வலி ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று காலை குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு இடுப்பு பகுதிக்கு கீழ் ஆண் பெண் பாலின வேறுபாடுயின்றி மீன்வால் போன்ற உருவ அமைப்பில் காணப்பட்டது. பிறந்த இந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு பெற்றோர்கள் தூக்கி சென்று விட்டனர்.

இதுகுறித்த பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் மனோகரன் கூறுகையில், இந்த குழந்தை முழு வளர்ச்சி பெறாததால் உடல் உறுப்புகள் குறைபாடுகளுடன் பிறந்துள்ளது.

இதை பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தோம், தொடர்ந்து 10வது மாதத்தில் சுகப்பிரசவமாக பிறந்த இந்த குழந்தை தற்போது முழு வளர்ச்சியின்றி ஒரு கை குட்டையாக 2 விரல்களுடனும் மற்றொரு கையில் 6 விரல்களுடனும் இடுப்புக்கு கீழ்பகுதி ஆண் பெண் உறுப்புகள் இன்றி மீன் வால் போன்று அமைப்பில் உள்ளது என்றும் இந்த குழந்தை இதுவரை உயிரோடுதான் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

மீன் வடிவத்தில் பிறந்த இந்த அதிசய குழந்தையை சுற்று வட்டார கிராம பொதுமக்கள் சென்று பார்த்து வருகின்றனர்.