வவுனியாவில் 1600 ஆவது நாளாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!!

614


1600 ஆவது நாளாக..



தமிழர் தாயகப் பிரதேசத்தில் இருந்து சீனா வெளியேற வேண்டும் என வவுனியாவில் 1600 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



வவுனியாவில் 1600 ஆவது நாளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (05.07) தமது போராட்டத்தின் 1600 ஆவது நாளை முன்னிட்டு தமது போராட்ட கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.




சீனாவுக்கு எதிரான பதாதைகளையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், சீனா தமிழர் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும். தமிழர்கள் கடந்த 74 ஆண்டுகளாக அரசியல் தீர்வுகளை கேட்டு வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு போரின்போது, 146,000 தமிழர்கள் கொ.ல்.லப்பட்டனர் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.


காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள், பொறுப்பு மற்றும் நீதியைக் காண கடந்த 1600 வது நாளாக, ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு என்று தொடர்ந்து போராடி வருகிறோம்.

ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் தமிழர்களுக்கான நீதியை சீனா எதிர்ப்பதால், சீனா தமிழர்களின் நண்பர் அல்ல. எனவே, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் நாங்கள் சீனாவை தமிழ் தாயகத்தை விட்டு வெளியேறச் சொல்கிறோம்.

மனித உரிமைகளிள் அக்கறை கொண்ட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கையில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த தாமதிக்காமல் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.