பிறந்ததும் இ.றந்த கு.ழந்தை மயானத்தில் உயிர்த்தெழுந்த அதிசயம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

968

தேனி..

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் பிலவேந்திரராஜா – பாத்திமாமேரி தம்பதி. ஏற்கனவே இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3வதாக கர்ப்பம் தரித்துள்ளார் பாத்திமாமேரி.

ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த பாத்திமாமேரிக்கு சனிக்கிழமை இரவு பிரசவ வ.லி ஏற்பட்டு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்தது. உடனடியாக அவரை உறவினர்கள் வாகனம் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நள்ளிரவு 12.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு அதிகாலை 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், 700 கிராம் மட்டுமே இருந்த அந்த குழந்தை சுவாசப் பிரச்சனையால் பிறந்த சிறிது நேரத்திலேயே இ.றந்துவிட்டதாகவும் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை நடைமுறைகளுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு முப்பது மணிக்கு இ.றப்பு தொடர்பான ஆவணங்களுடன் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு பிலவேந்திரராஜாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

மயானத்தில் ஏற்கனவே தோ.ண்டப்பட்டு தயார் நிலையில் இருந்த கு.ழிக்குள் பு.தைப்பதற்காக தூ.க்கியபோது கு.ழந்தையின் உ.டலில் அசைவு காணப்பட்டுள்ளது.

கு.ழந்தை உ.யிருடன் இருப்பதைக் கண்டு இ.ன்ப அ.திர்ச்சி கொண்ட பெற்றோரும் உறவினர்களும் மீண்டும் தேனி அ.ரசு மருத்துவக் கல்லூரி ம.ரு.த்துவமனைக்கு கு.ழந்தையுடன் ஓ.டினர்.

வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குறைமாதத்தில் பிறந்து, மூச்சு விடாமல் இருந்த குழந்தையை சரியாக பரிசோதிக்காமல்,

இ.றந்துவிட்டதாக த.வறாக கருதிவிட்டனர் என்றும் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் துறை ரீதியான வி.சாரணை ந.டத்தப்படும் என்றும் மருத்துவமனையின் தலைவர் பாலாஜிநாதன் கூறினார்.