வவுனியாவில் மக்கள் வங்கியும் யாழ். தினக்குரலும் இணைந்து நடாத்திய “கல்விச் சங்கமம்” தரம் 5 புலமைப் பரீட்சை சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு!!(படங்கள்)

654


வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஆதரவுடன் வவுனியா மக்கள் வங்கியும் யாழ். தினக்குரலும் இணைந்து நடாத்திய “கல்விச் சங்கமம்” தரம் 5 புலமைப் பரீட்சை சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்விற்கு தினக்குரல் ஸ்தாபகர் திரு.எஸ்.பி.சாமி அவர்கள் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினர்களாக திரு.எம்.எம்.சியான் அவர்களும் (வலயக் கல்விப் பணிப்பாளர்- மன்னார் வலயம்), திரு.A.J.குருஸ் அவர்களும் (வலயக் கல்விப் பணிப்பாளர்- மடு வலயம்), திருமதி.அன்ரன் சோமராஜா அவர்களும் (வலயக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா தெற்கு), திருமதி பராசக்தி கணேசலிங்கம் அவர்களும் ( கல்விப் பணிப்பாளர்- வவுனியா வடக்கு), சிறப்பு விருந்தினராக திரு.தமிழருவி த.சிவகுமாரன் அவர்களும் (செயலாளர் வவுனியா தமிழ்ச் சங்கம்) கலந்து சிறப்பித்தனர்.



இன் நிகழ்வில் தரம் 5 முன்னோடிப் புலமைப் பரீட்சையில் அதிதிறமைச் சித்தி பெற்ற வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 125 மாணவர்களும், மாணவர்களைச் திறம்படச் சித்தியடையச் செய்த 31 பாடசாலைகளும் கௌரவிக்கப்பட்டன.

-பாஸ்கரன் கதீசன்-



10 12 13 14 16 18 19