குளிர்பானம் என எண்ணி அசிட்டை குடித்த சிறுவன் பலி!!

338

Acidதமிழகத்தின் புதுவை கதிர்காமம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். புதுவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் தருண்ராஜ் (7). இவர் அங்குள்ள அரச பாடசாலையில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.

நாகராஜ் வீட்டில் அவரது மைத்துனர் பிரகாஷ் (31) என்பவர் தங்கியுள்ளார். அவர் தனியார் பாடசாலை ஒன்றில் வேதியியல் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

இதற்கிடையே பாடசாலை செயற்திட்டம் ஒன்றிற்காக பிரகாஷ் குளிர்பான போத்தல் ஒன்றில் அசிட் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சிறுவன் தருண்ராஜ் வீட்டில் வைத்திருந்த ஆசிட்டை குளிர்பானம் என நினைத்து எடுத்து குடித்துவிட்டான்.

இதில் குடல் முழுவதும் வெந்த நிலையில் அலறி துடித்த சிறுவனை அவனது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை ஜிப்மர் வைத்தியசாலையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சிறுவன் தருண்ராஜ் பரிதாபமாக இறந்து போனான்.

இதுகுறித்து கோரிமேடு பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.