இளம் மனைவி திடீர் தற்கொலை : ஆடையில் மறைத்து வைத்திருந்த கடிதத்தில் தெரியவந்த உண்மை!!

923

தமிழகத்தில்..

தமிழகத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. தஞ்சாவூரின் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 31).

இவருக்கும், பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழழகிக்கும் (26) கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது, குழந்தை இல்லை.

பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருவதால், தமிழழகி மாமனார்- மாமியாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரவு தமிழழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன்னுடைய மகளின் மரணத்துக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என தமிழழகியின் தந்தை புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குபதிவு செய்த திருச்சிற்றம்பலம் போலீசார், தீவிர விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் தமிழழகியின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அவரது உள்ளாடையிலிருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், தன்னுடன் 3 பேர் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களின் பெயர்களையும் தமிழழகி குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தொடர்பு குறித்து வெளியே தெரியவந்ததால் அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து ஆகாஷ் (வயது 21), அதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் (28) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மீதும் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) 306 எஸ்.சி. எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு சட்டம்) ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நேற்று கைது செய்தனர்.