மனைவியிடம் தகராறு செய்த கணவன் : இரு குழந்தைககளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

738

தமிழகத்தில்..

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3- பேர் பூச்சி கொல்லி மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஈரோடு மாவட்டம் கொளாநல்லி அருகே உள்ள வீரப்பன் கவுண்டன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. விவசாயியான இவர் நேற்று மனைவி சசிகலாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்து பிரபுவின் மனைவி சசிகலா (வயது 33), பூச்சி கொல்லி மாத்திரையை உட்கொண்டதுன் தனது மகன் நிகின் சங்கர் (வயது 12) மகள் சுதர்ஷனா (வயது 10) ஆகியோருக்கும் கொடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டும் சிகிச்சை பலனின்றி 3- பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக மலையம்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.