வவுனியாவில் பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவியேற்றத்தை வெடி கொழுத்தி கொண்டாடிய ஆதரவாளர்கள்!!

2017

புதிய நிதியமைச்சராக பசில்..

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

அதனையடுத்து பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட ஆதரவாளர்களினால் பசில் ராஜபக்சவின் பதவிப்பிரமாண கொண்டாட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08.07.2021) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் பலர் ஒன்றுசேர்ந்து பட்டாசு கொழுத்தி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.