தவறான பாதைக்கு சென்ற 21 வயது இளைஞன் : குழம்பிய மனதால் நேர்ந்த விபரீதம்!!

780

தமிழகத்தில்..

தமிழகத்தில் தன்னை விட வயது அதிகமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 21 வயது இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் ஜெயசங்கர்.

இவர் நாகர்கோவில் ஆயுதப்படையில் பொலிசாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் (21). அபிஷேக் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலை தேடி வந்தார்.

அப்போது, தன்னை விட வயதில் அதிகமான திருமணமான பெண்ணுடன் அபிஷேக்கிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த ஜெயசங்கர், மகன் அபிஷேக்கை கண்டித்துள்ளார்.

அவளுக்கு உன்னை விட வயது அதிகம் என்பதோடு திருமணம் ஆனவள், அதனால் அப்பெண்ணை சந்திக்காதே என திட்டி வந்தார். இதனால், கடந்த சில நாட்களாக அபிஷேக் குழப்பத்தோடு இருந்ததோடு மனமுடைந்த நிலையிலும் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயசங்கர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் அபிஷேக்கை காணவில்லை. உடனே, மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்ல. இதனால், சந்தேகமடைந்த ஜெயசங்கர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அபிஷேக் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், இதுபற்றி தகவல் அறிந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் அபிஷேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.