புலமைப் பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

1863

புலமைப் பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள்..

இலங்கையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை 2021, அக்டோபர் 3ஆம் திகதியன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2021, அக்டோபர் 4 முதல் அக்டோபர் 31 வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி பாடசாலைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.