வவுனியா பொதுசந்தையில் 112 பேருக்கு பிசீஆர் பரிசோதனை!!

1663

பிசீஆர் பரிசோதனை..

வவுனியா பொது சந்தையில் 112 பேருக்கு சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பொது சந்தையில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அப் பகுதியில் சில வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வவுனியா பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதில் கடமையாற்றுவோர் என 112 பேருக்கு சுகாதாரப் பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகளையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.