வவுனியா நவீன சந்தையில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு 2 நாட்கள் அவகாசம் : மீறினால் சட்ட நடவடிக்கை!!

2813


நவீன சந்தை..



வவுனியா நவீன சந்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார நடைமுறைகளை சீராக்குவதற்கு இரு நாட்கள் கால அவசாகம் வழங்கப்பட்டுள்ளதுடன் மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா பொது சுகாதாரப்பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.



நவீன சந்தை கட்டிட தொகுதியில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதில் கடமையாற்றுவோர் என்பவர்களுக்கு பி.சீ.ஆர் மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



குறித்த கட்டிட தொகுதியில் சுகாதார நடைமுறைகள் சிலவற்றை சீராக பேணுவதில் இடையூறுகள் காணப்படுகின்றன. இங்கு பல நபர்கள் முகக்கவசத்தினை சீரான முறையில் அணிவதில்லை. இப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு 5 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு அங்கு பணியாற்றுவோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


வர்த்தக நிலையங்கள் முன்பாக மற்றும் நடைபாதைகளில் பொருட்கள் உள்ளமையினால் தொற்று நீக்கும் செயற்பாட்டை மேற்கொள்வதற்குறிய வசதிகள் இல்லை என்பதுடன் 2 நாட்கள் காலஅவகாசம் வழங்குகின்றோம்.

இரு நாட்களுக்குள் வர்த்தக நிலையம் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவுள்ள பகுதி என்பன தொற்று நீக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தல் கட்டாயமாகும்


வர்த்தக நிலையத்திற்கு முன்பாக பொருட்களை வைப்பதற்கு 1 அடி மாத்திரமே நகரசபை கட்டளை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்காக சுகாதார பிரிவினரின் வேண்டுகோளிக்கினங்க 1 1/2 அடி வரை பொருட்களை வைப்பதற்கு நகரசபையினரினால் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுடான ஒரு மீற்றர் இடைவேளி பேணுதல் அவசியமாகும் இவற்றினை சீராக நடைமுறைப்படுத்தாதவிடத்து ஒற்றை எண் அடிப்படையில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கும் (50 வீதமான வர்த்தக நிலையங்கள் ஒர் நாளைக்கு என்ற அடிப்படையில்) நடவடிக்கை எடுத்துள்ளோம்

சுகாதார நடைமுறைகளை மீறி செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளவும் தயராகவுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.