30 கோடி ரூபா மதிப்பிலான திமிங்கல வாந்தி : பறிமுதல் : திட்டம் போட்டு பிடித்த போலீஸ்!!

981


திமிங்கல வாந்தி..



இந்திய மாநிலம் கேரளாவில் ரூ. 30 கோடி மதிப்புள்ள 19 கிலோ திமிங்கல வாந்தியை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கேரள மாவட்டம் திரிசூரில், சேட்டுவாவிலிருந்து சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள,



‘திமிங்கல வாந்தி’ என்று அழைக்கப்படும் அம்பெர்கிரிஸை (Ambergris) வனத்துறை கைப்பற்றினர். மேலும், இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளனர்.




வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, கேரளாவில் அம்பெர்கிரிஸ் விற்கும் ஒரு குழு பிடிபடுவது இதுவே முதல் முறை என கூறினர். கேரள வன பறக்கும் படை மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் நடத்திய நடவடிக்கையின் பின்னர் மூன்று பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலில் திரிசூரிலிருந்து வந்த ரபீக் மற்றும் பைசல், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஹம்சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கறுப்புச் சந்தையில் ஒரு குழு அம்பெர்கிரிஸ் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் பிடிபட்டனர். ஒரு சில வன அதிகாரிகள் சந்தேக நபர்களை அம்பெர்கிரிஸ் வாங்க விரும்புவதைப் போல அணுகி பின்னர் அவர்களைப் பிடித்தனர்.


பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்ரிஸ் எடை சுமார் 19 கிலோ. இது சர்வதேச வாசனை சந்தையில் (international fragrance market) அதிக விலை மதிக்கத்தக்கது.

இந்தியாவில், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அம்பெர்கிரிஸ் தயாரிக்கும் விந்து திமிங்கலங்களை (Sperm Whales) வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் விற்கும் அம்பெர்கிரிஸை எவ்வாறு பெற்றார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பொதுவாக ‘திமிங்கல வாந்தி’ என்று அழைக்கப்படும் அம்பெர்கிரிஸ், பழுப்பு நிற மெழுகு பொருள், இது விந்து திமிங்கலங்களின் அடிவயிற்றில் உருவாகிறது. திமிங்கலங்களால் வாந்தியெடுக்கப்படும் இந்த பொருள் கோடிக்கணக்கில் விலைமதிக்கத்தக்கது.

மத்திய கிழக்கில் ஓமன் கரையோரப் பகுதி அம்பெர்கிரிஸுக்கு பிரபலமானது. இந்த பொருள் வாசனை திரவிய சந்தையில் தங்கத்தைப் போலவே மதிப்புமிக்கது.