கொரோனா வைரஸ்..
உருமாறிய இரண்டு கோவிட் 19 வைரஸ் திரிபுகள் ஒரே தடவையில் ஒருவருக்கு தொற்றாலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அல்ஃபா மற்றும் பீட்டா ஆகிய இரண்டு கோவிட் திரிபுகள் தொற்றிய பெல்ஜியத்தை சேர்ந்த 90 வயதான பெண் உயிரிழந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக இரண்டு கோவிட் திரிபுகள் தொற்றியவர் குறித்த இந்த தகவல் முதல் முறையாக வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு இரண்டு கோவிட் திரிபுகள் தொற்றினால், ஏற்படக் கூடிய நிலைமை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெல்ஜியம் நாட்டின் மருத்துவ நிபுண்கள் குழு தெரிவித்துள்ளது.
-தமிழ்வின்-