முல்லைத்தீவில் குளிப்பதற்கு சென்ற மாணவனை காணவில்லை!!

855

விஜயகுமார் விதுசன்..

முல்லைத்தீவு உதயசூரியன் நகர்ப்பகுதியில் வசிக்கும் மாணவன் ஒருவர் காணாமற்போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் துணுக்காய் வீதியில் உதயசூரியன் நகர்ப்பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் எனும் 14 வயது மாணவன்,

நேற்று(10) இரவு 7 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் செல்வதாகச் சென்ற மாணவனைக் காணவில்லை என மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் கிணற்றில் குளிக்கச் சென்று உடைகள் கிணற்றடியில் காணப்படுகின்றது கிணற்றடிக்குச் சென்று மாணவன் மீண்டும் வீட்டுக்கு வந்து சவர்க்காரம் எடுத்துச் சென்றுள்ளார்.

அவர் எடுத்துச் சென்ற சவர்க்காரம் மாங்குளம் துணுக்காய் வீதியில் அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் உள்ளது. இந்நிலையில் மாணவனுக்கு என்ன நடந்தது என்று பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர்.

குறித்த மாணவனைக் கண்டவர்கள் 0770871475 தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.