செல்பி மோகத்தால் புது மாப்பிள்ளை உட்பட 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்!!

1020

நீரில் முழ்கி…

தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர், ‘செல்பி’ மோகத்தால் ஆந்திராவில் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த புதுமண தம்பதி லோகேஷ் (23), பிரியா (21) இருவரும் ஆந்திரா – தமிழக எல்லையில் உள்ள தடா நீர்வீழ்ச்சி சுற்றுலா தளத்திற்கு சென்றனர்.

வழியில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தங்கள் நண்பர்கள் கார்த்திக் (17), பாலாஜி (24), யுவராஜ் (22) ஆகியோரை அழைத்துச் சென்றனர். கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் சுற்றுலா தளம் மூடப்பட்டிருந்தது.

அதனால் அருகில் இருந்த தெலுங்கு கங்கா கால்வாயில் சற்று நேரம் ஓய்வெடுக்கச் சென்றனர். அப்போது யுவராஜ், செல்பி எடுக்கும்போது கால் தவறி கால்வாயில் விழுந்தார்.

இதை கவனித்த நண்பர்கள் மூன்று பேரும், யுவராஜை காப்பாற்ற நீரில் குதித்தனர். ஆனால் நீரோட்டத்தில் மூன்று பேரும் அடித்து செல்லப்பட்டனர். தீவிர தேடுதலுக்குப் பின், தற்போது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மூன்று நாட்களுக்கு முன் நடந்த இச்சம்பவம் குறித்து, பிரியா அளித்த புகாரின் அடிப்படையில், பொலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.