சுவிஸ் மொழி பேசத்தெரியாததால் விலைமாதுக்களான பெண்கள்!!

523

Swiss

சுவிசில் அப்பாவி பெண்களை அடைத்து வைத்திருந்த கடத்தல் கும்பல் தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளது.

சுவிஸ் தலைநகர் பெர்னில் கடத்தல் கும்பல் ஒன்று தாய்லாந்திலிருந்து 25 அப்பாவி பெண்களை கடத்தி விபச்சார விடுதியில் அடைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 52 வயது பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் 47 வயது நிரம்பிய ஆண் ஒருவன் இவருடன் உடந்தையாக இருந்துள்ளான் என்றும் தாய்லாந்திலிருந்து சுவிஸ் வருவதற்காக 10,000 முதல் 15,000 பிராங்குகள் வரை இப்பெண்களுக்கு கடனாக கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

இவ்விருவரும் பாலியல் குற்றத்திற்காகவும், மனிதர்களை நாடு விட்டு நாடு கடத்திய குற்றத்திற்காகவும் 4 மாத காலம் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களால் கடத்தப்பட்ட பெண்கள் சுவிஸ் நாட்டு மொழி பேசத்தெரியாததால் விபச்சார விடுதிகளில் அடிமைகளாய் வாழ்ந்துள்ளனர். மேலும் இவர்கள் ஈட்டிய பணத்தை கடத்தல் கும்பல் அபகரித்துள்ளனர்.