இறந்து கிடந்த மனைவி : பக்கத்திலேயே தூங்கிக்கொண்டிருந்த கணவன் : உறவினர்கள் கண்ட காட்சி!!

726

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி உயிரிழந்து கிடக்க, பக்கத்திலேயே கணவன் படுத்து தூங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கரூரின் மாயனூர் காசா காலனியை சேர்ந்தவர் மாலதி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்த தனசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 4 வயதில் ஆசித் என்ற மகன் உள்ள நிலையில், மாலதி மாயனூரில் உள்ள தாய் தமிழரசியின் வீட்டில் மகன் ஆசித்துடன் வசித்து வந்தார்.

வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் தனசேகரன், அவ்வப்போது வந்து மனைவி, பிள்ளையை பார்த்து செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று தனசேகரன் வந்தபோது, கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது தனசேகரன் போ.தை.யி.ல் இருந்ததாக தெரிகிறது, இந்நிலையில் இன்று காலை தொடர்ந்து ஆசித் அழுதுகொண்டே இருந்ததாக தெரிகிறது. இதனால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, மாலதி சடலமாக கிடந்துள்ளார், பக்கத்திலேயே தனசேகரன் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.

இதை பார்த்ததும் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த போலீசார், மாலதி உயிரிழந்த கிடந்த அறையில் உள்ள மின்விசிறியில் மாலதியின் துப்பாட்டா மாட்டியிருந்ததை பார்த்தனர்.

இதனால், மாலதி தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டாலும், அவரது உடல் தரையில் கிடந்தது எப்படி என சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, போதையில் இருந்த தனசேகரனை எழுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர்.