பெண்ணை வசியப்படுத்த நள்ளிரவில் மயானத்திற்கு சென்று எலும்புகளை எடுத்து இளைஞர் செய்த செயல்!!

772

இந்தியாவில்..

இந்தியாவில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பெண்ணை வசியப்படுத்துவதற்காக சுடுகாட்டில் இருந்து எலும்புகளை கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி மண்டலம், ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்தவர் முரளி. 30 வயது மதிக்கத்தக்க இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், முரளி அவ்வப்போது சில செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர் திசையில் பெண்கள் பேசினால், அவர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

அவ்வாறு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில், ராங்கால் மூலம் நல்கொண்டா மாவட்டம், குண்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பு கிடைத்துள்ளது.

அந்த பெண்ணிடம் மூன்று மாதங்களாக செல்போனில் பேசி வந்த நிலையில், இருவரும் நேரடியாக சந்திக்க முடிவு செய்துள்ளனர். அப்போது அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் தெரிந்த முரளி, அவரை விட்டுவிட்டு தன்னுடன் வந்துவிடுமாறு கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு அப்பெண் மறுத்துவிடவே, அந்தப் பெண்ணை வசியப்படுத்த திட்டமிட்டு, பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வசியப்படுத்துவது எப்படி? என்று வீடியோ பார்த்து வந்துள்ளார்.

பின்னர், அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் உள்ள எலும்புகள் மற்றும் வசியம் செய்ய தேவையான பொருட்களை எடுத்து சென்று, நள்ளிரவில் அந்த பெண்ணின் வீட்டின் முன் சூனிய பூஜை நடத்தி உள்ளான்.

காலையில் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பூஜை பொருட்கள் இருப்பதை பார்த்து அப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் இது குறித்து விசாரித்த போது, முரளி தான் அதை செய்தது என்பது தெரியவர,

உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவரது செல்போனை வைத்து முரளியை கைது செய்த பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.